பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. 6. நெஞ்சு பொறுக்கு திலேயே - இதை நினைந்து நினைந்தின்னும் வெறுக்குதிலேயே: கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து, துஞ்சி மடிகின்ருரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலேயே. (நெஞ்சு) 7. எண்ணிலா நோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமை யிலார்; கண்ணில்லாக் குழந்தை கள்போல் - பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்; நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங்கோடி நயந்து நின்று, புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார். (நெஞ்சு) பணியாள் இல்லாவிட்டால் வீட்டிலே வேலை ஒடாது. அந்தப் பணியாளோ, பாவம் எத்தனையோ வகைகளில் ஏமாற்றுகிருன். பாரதியார் இதை நன்முக அனுபவித் திருக்கிருர் - பணியாள் எத்தனை வகைகளில் ஏமாற்றுகிருன் என்பதை நகைச்சுவையோடு கண்ணன் என் சேவகன் என்னும் கவிதையிலே தெரிவிக்கிரு.ர். பணியாளைக் கண்டனம் புரியவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பணியாளுக்கு என்றுமே பாரதியார் உள்ளத்திலே இரக்கம் உண்டு. தொழிலாளருக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் எனப் பரிந்து பேசி ஒரு நீண்ட க ட் டு ைர யே வரைந்திருக்கிரு.ர். அதனல் பணியாளர் பலவித சாக்குப் போக்குச் சொல்லும்போது அவரிடம் கோபம் வருவதில்லை. அதற்கு மாருக நகைச்சுவை மிகுந்து வெளிவருகின்றது. கவிதையைப் பார்ப்போம்