பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

13



88. “வாக்காளர்களைத் தயாரிப்பது பண்புடை யோராக்குவது சுதந்தர நாட்டின் முதற்கடமை”.

89. “தனி மனித ஒழுக்கக் கேடுகள் பெரும்பாலும் சமூகத்தின் பொருந்தாப் பழக்க வழக்கங்களின் திணிப்பிலேயே உருவாகின்றன”.

90. “மாமுனிவர் மார்க்சின் நினைவாக இலாப நோக்கத்தை கைவிடுதல் நல்லது”.

91. “மாமுனிவர் மார்க்ஸ் நினைவாக பள்ளிக் கணக்குகளில் இலாப நட்டக் கணக்குப் பாடத்தை எடுத்துவிடுவது நல்லது”.

92. “தமிழ் இருக்கும் இடத்திலேயே தமிழர் இருப்பது என்று உறுதி எடுப்பாரானால் தமிழ் வளர்ந்து ஓங்கும்”.

93. “அசைவில் செழுந்தமிழ் வழக்கினைப் பேன வேண்டியவர்கள் அயல் வழக்கின் வழிச் செல்வது, அறம் கொல்லும் பாவமாகும்”.

94. “சோம்பல் தனமுள்ள யானையை சுறுசுறுப் பான எந்த உயிரும் எளிதில் வெற்றி கொள்ளும். அது போல, மொழியால் சமய நெறியால் வள்ர்ந்த தமிழின்த்தின் மதர்த்த சோம்பலை ஆரியம் வெற்றிகொள்ளத் துடிக்கிறது”.

95. “புதுப் பெரிய வாளின் சுறுசுறுப்பு ஏன் துறை சைக்கும், தருமைக்கும் வரவில்லை? நமது நல்லூழின்மையே!”

96. “குறைவான வேலை பார்ப்பவர்கள் கூட நிறைவாகப் பார்க்காது போனால் கடுமையான உழைப்புடையவர்களின் மீது மேலும் சுமையை ஏற்றும்”.