பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு அடிகளார்



730. “நடந்து போனதற்குக் கவலைப் பட்டுப் பயனில்லை. இனி நடக்க வேண்டியதற்கே கவலைப் படவேண்டும்”.

731. “பிறப்பின் சார்பால் வரும் குணக்கேடுகளை நீக்கவே கல்வி-கேள்வி”

732. “ஏதாவது ஒர் உயர் நோக்கம் வாழ்க்கையை ஆக்கிரமிக்காதவரை குற்றங்களினின்று விடுதலை பெற இயலாது.”

733. “வேலை நடக்கும். ஆனால், நடந்த வேலைகளைக் கொண்டு பணி செய்தார் என்று முடிவு செய்யக்கூடாது. அவர் வாழும் காலத்தின் தேவை ஆற்றல்-வாய்த்த கருவிகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் அளவை செய்ய வேண்டும்.”

734. “ஏழைகளாக வாழும் மக்களை அறிவுணரச் செய்வது கடுமையான பணி.”

735. “இயற்கையின் நியதி வழி, கொண்டும் கொடுத்தும் வாழும் முறையே அமைந்துள்ளது. மரங்கள் மண்ணிலிருந்து தண்ணிர், உரம் எடுத்துக் கொண்டு வளர்கின்றன. பின் அவை பழுத்த இலை களை மண்ணுக்கு உரமாகத் தந்துவிடுகின்றன”

736. கொடுக்காமல் எடுக்கும் வாழ்க்கை சுரண்டல் வாழ்க்கை”

737. “வறுமையை அனுபவித்துப் பழகிப்போன வாழ்க்கை”

738. “வாழ்தல் வேறு வாழ்க்கையின் நோக்கம் வேறு. வாழ்தலுக்குரிய முயற்சிகள் நோக்கங்களைச் சார்ந்தவையாகா”