பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

29



207. “நிர்வாகம்” என்ற சொல்லில் வளர்த்தல், பாதுகாத்தல், நீக்குவன நீக்குதல், பயன்படுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.

208. “உடம்பு நல்ல நிர்வாக முறைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.”

209. “சதைச் சோம்பலில் சுகம் கான்பவர்கள் நுகர்வார்கள்; களிப்பார்கள். உழைக்கமாட்டார்கள் மகிழ்வாக இருக்கமாட்டார்கள்.”

210. “களிப்பும் மகிழ்ச்சியும் வேறு, வேறு. களிப்பு காரண காரியங்களுக்குக் கவலைப் படாமல் உன்மத்தனைப் போல் களித்திருத்தல், மகிழ்ச்சி, என்பது அறிவார்ந்த நிலையில் மகிழ்தலாகும்.”

211. “இனம்” என்ற பரந்த சொல் இன்று “சாதி’ என்ற அளவுக்குள் குறுகிவிட்டது.”

212. “பேய் பிடித்தவன் ஆடினாலும், குற்றம் பேய் பிடித்தவனிடம் இல்லை. பேயினிடமேயாம்.”

213. “இன்று தீண்டாமையைக் கடுமையாக அனுட்டிப்பவர்கள் பிற்பட்ட சமுதாயத்தினரேயாம். அதாவது தேவர், வன்னியர் முதலிய சமுதாயத்தினர். ஆனால், இந்தச் சாதி முறையைக் கற்பித்தவர்கள் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்.

214. “பழகும் எல்லையின் பரப்பளவு அதிகம் ஆக ஆக குற்றம்-குறைகானும் மனப்போக்கு இருப்ப தில்லை. எல்லை குறுகல் அடையும்போது குற்றங்களே தெரியும். ஏரிகளின் தண்ணிரில் தூசி பார்ப்ப தில்லை; குவளைத் தண்ணிரில் பார்க்கிறோம் அல்லவா?