பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு அடிகளார்



1261. “உறவுகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளை உடையனவே. எதிர்பாாப்புகளைச் செய்ய இயலாத போது மனத்தாங்கல் ஏற்படும்.”

1262. “செய்யும் மனமிருந்தால் வாய்ப்புகள் தாமே வந்தெய்தும்.”

1263. “புகழ்-மேலாண்மை-செயல்திறன் ஆகிய நன்மைதரு துறைகளில்கூட அழுக்காறு தோன்றாமல் தடுக்க, தன்னடக்கம் தேவை.”

1264. “குறைந்த விலையுடைய உணவுப் பண்டங்களே நல்ல உணவுக்குப் பயன்படுகின்றன.”

1265. இயற்கையை ஒட்டிச் சென்றால் எதுவும் செய்யலாம். இயற்கையிலிருந்து மாறுபடும் வாழ் நிலை கூடாது.”

1266. “செயற்கை, இயற்கையோடு பொருந்தாது.”

1267. “நல்ல சமையற்காரர் கிடைத்துவிட்டாலே ஆயிரம் காரியம் செய்யலாம்.”

1268. “நமது உடலைக் கவனிக்கவே உறவுகள்: ஆனால் நடப்பதுதான் இல்லை.”

1269. “தன்னை என்றும் இளமையுடையோனாகத் கருதிக் கொள்ளவேண்டும் என்பதற்காக-பொய்ம்மையாக உடலின் நிலையினை மறைத்து வாழ்தல் கூடாது.”

1270. “உடனுக்குடன் நோய்க்குரிய காரணத்தை மாற்றாது வாழ்வது, நோயை அதிகப்படுத்தும்.”

1271. “நோயின் காரணத்தை மாற்றாமல் நோய்க்கு மருந்துண்பவர்கள், நிரந்தர நோயாளிகள் ஆகிவிடுவர்.”