பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு அடிகளார்



1085. “ஒரு செயலைக் கடமை உணர்வுடன் செய்தால் அது அழகாகவும் பயன்தரத் தக்கதாகவும் அமையும்.”

1086. “எளிதில் செல்வம் கிடைத்தால் உயிர் வளராது; தகுதி: பெறாது.”

1087. “துன்பம் நிறைந்த செயற்பாடுகளே பயனும் பண்பாடும் நிறைந்த வாழ்க்கைக்கு அடிப்படை.”

1088. “முழுக் கவனத்துடன் செய்யப் பெறாத பணிகள் உரிய மகிழ்வைத் தருவதில்லை.”

1089. “ஒவ்வொருவரும் அவரவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டால் முன்னேறலாம்.”

1090. “தேடும் பழக்கம் அறிவை வளர்க்கும். ஆள்வினை ஆற்றலைத் தரும்.”

1091. “செல்வத்தைச் செலவுக்காக என்று தேடுதல் கூடாது. இருப்புக்கு என்று தேடுதல் வேண்டும்.”

1092. “கெட்ட மனிதர்கள் எரிமலை போல உள் புகைந்து கொண்டே இருப்பர்.”

1093. “உடல், உயிர், அறிவு மூன்றும் சமநிலையில் வளர்ந்தாலே மனிதகுலம் மேம்பாடு அடைய முடியும்.”

1094. “உலகில் வறுமைக்கு காரணம் உழைப்பின்மையும் உழைப்புக்கு உரிய பாங்கின்மையுமே யாகும்.”

1095. “உத்தரவாதமுள்ள வாழ்க்கையிலேயே காதல் சிறக்கும்.”