பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு அடிகளார்



1379. “பழக்கம் என்பது சேறு. இச்சேற்றில் சிக்கியவர்கள் எளிதில் கரையேற மாட்டார்கள்.”

1380. “தெரியவேண்டியன தெரியவும், துணிய வேண்டியன துணியவும் செய்ய வேண்டியன செய்யவும் தடையாக இருப்பவை எதுவும் தீமையேயாம்.”

1381. “செயலின்மையால் யான் அழிவதைவிட தாட்சண்யத்தால் அழிவதே மிகுதி.”

1382. “கூட்டுச் சமூக வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொள்ளாதவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் தனி மனிதரே!”

1383. “உலகம் முழுதும் சமநிலைச் சமுதாயம் தோன்றினாலே போரிடும் உலகம் திருந்தும்.”

1384. “வாழ்வோரினும் செத்தார் உண்டு; செத்தோரினும் வாழ்வோர் உண்டு.”

1385. “அக்கறை என்பது இடம் நோக்கிச் செயற்படும் பண்பன்று; இயல்பானது.”

1386. “காசுகளின் அருமை அறியாதார், எப்போதும் செல்வந்தர் ஆகார்.”

1387. “மேடைகள் அமைத்தலே இப்போது ஒரு பிழைப்பாகிவிட்டது.”

1388. “இருபாலும் ஒத்த, ஒன்றைக் கூறினாலும் ஏற்க முன் வராது போனால் அவர்கள் நியாயத்தை மறுக்கிறார்கள்.”

1389. “சிலருக்கு ஒன்றை எப்படியும் அடைந்து விடுவது என்ற மனத்தின் பின்னணியில் கரவும் வன்கண்மையும் இருக்கும். இவர்கள் உறவு ஆகாது.”