பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

23



163. “ஒரு தமிழ்ப் பெண் இந்தியை தாய் மொழியாகவுடைய ஆடவனை மணந்ததால் இந்திக்காரப் பெண்ணாக மாறிவிட்டார். இந்திக்கு உள்ள கவர்ச்சி என்னே! என்னே!”

164. “ஒரு மனிதனை, வேறு மனிதனிடமிருந்து வேற்றுமைப்படுத்திப் பிரித்துப் பார்ப்பதே தீமை. இத்தீமையைக் கடவுளின் பெயரால் செய்தாலும் பாபமே!”

165. “மனிதரை மனிதர் இழிவு செய்தல் அற மன்று. யாதானும் ஒருவகையில் தாழ்ந்தாராயினும் தாழ்மையிலிருந்து மீட்க வேண்டுமே தவிர, இழிவு செய்தல் கூடாது; ஒதுக்கக் கூடாது.”

166. “செல்வமும் மனிதரைக் கோழையாக்குதல் உண்டு. செல்வத்தை இழந்துவிடும் அச்சத்தில் கோழையாதல் உண்டு.”

167. “வாய்ப்புக்கிடைப்பின் பார்ப்பனர் யாரையும் பயன்படுத்திக் கொள்வர். தமிழர்க்கு இத்திறன் கிடையாது.”

168. “அறியாமை சுரண்டலுக்குப் பயன்படும் சாதனம்; அறிவை நல்க விரும்புபவர்கள் சுரண்ட மாட்டார்கள்.”

169. “தமிழர்கள் உழைப்பாளிகள். ஒருமையும் ஒழுங்கமைவுமிருப்பின் உலகத்தை வெல்வர்.”

170. “நத்தையில் முத்து பிறப்பதை நோக்கினால் நந்தனார் தோற்றம் வியப்பன்று. ஆனால் சொத்தைகளை முத்து என்று போற்றுவாரை என்னென்பது?”

171. “இயற்கையில் உள்ள அழகுக்கு உயிர் உண்டு. செயற்கைக்கு அது இல்லை”.