பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

39



296. “யாருக்கும் கடனாளியாக உரிமை இல்லை; மற்றவர்களையும் கடனாளியாக்கக்கூடாது”.

297. “மனிதன் ஏமாற்றுவதில் காட்டும் புத்தி கூர்மைகளைக் காரியங்களில் காட்டினால் உலகத்தை சொர்க்கமாக்கி விடலாமே!”

298. “புத்தி கெட்டு, காரியங்கள் செய்யாமல் விட்டதால் அழிவு ஏற்பட்டதை காரியங்கெட்டுப் போச்சு என்கிறோம்”. (அண்ணாமலை)

299. “பொருள் உற்பத்தி செய்யப் பெறுவது; படைக்கப் பெறுவது. பொருள் உற்பத்திக்கு அறிவு தேவை. அறிவு பெற விழிப்புணர்வு தேவை”.

300. “நம்முடைய இயலாமைகளை - இழிவு களை இயற்கை என தாங்கிக் கொள்ளும் மனோ நிலை இருக்கிறவரையில் முன்னேற்றம் இல்லை”.

301. “எல்லோரையும் திருப்திப்படுத்த முயல்கிறவன் பைத்தியக்காரனாகி விடுவான்”.

302. “எப்போதும் கடமைகளைச் செய்யும் ஆயத்த நிலையில் இருப்பவர்கள் எதையும் சாதிப்பார்கள்”.

303. “கடமைகளைச் செய்வதற்குரிய விதிமுறைகளை மேற்கொள்ளாதார் கடமைகளைப் பயனுறச்செய்தல் இயலாது”.

304. “வழியோடு போதல் உழைப்பைக் குறைக்கிறது. களைப்பைக் குறைக்கிறது. பயத்தை குறைக்கிறது. பயணத்தை எளிதாக்குகிறது. அதுபோலவே விதிமுறைகளின்படி கடமைகளைச் செய்து வாழ்தலும் பயன்பல கூட்டுவிக்கும்”.