இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
என்ற சங்ககாலப் பாடலும்,
“........................ மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- (புறம் - 192)
என்ற பாடலும் சங்ககாலத்தில் மறுமலர்ச்சிக்கு துணையாய் அமைந்த பாடல்கள்! முடியரசுகள் செல்வாக்காக இருந்த நூற்றாண்டில், அரசனது ஆணை தெய்வீக ஆணை என்றிருந்த காலத்தில் அப்பரடிகள் அரசனின் ஆணையை எதிர்த்து முழங்கினார்.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!
- நரகத்தில் இடர்ப்படோம் நடிலை யல்லோம்
ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோ மல்லோம்
- இன்பமே எந்நாளும் துன்ப மில்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
- சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
- கொய்ம்மலர்ச் சேவடிஇணையே
- குறுகி னோமே!”
- கொய்ம்மலர்ச் சேவடிஇணையே
- (ஆறாம் திருமுறை 901)
என்ற பாடல், முடியாட்சியை எதிர்த்து குடியாட்சிக்கு வரவேற்புக் கூறிய பாடல் அன்றோ? திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும்!
இந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு தமது படைப்புக்கள் மூலம் உயிரளித்து வருபவர்களில்