பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 25


“வாழ்க்கை சிறப்புற அமைய, போர்க்குணம் தேவை” என்றான் மாமேதை லெனின், அறியாமை, வறுமை, ஏழ்மை இவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் வேண்டும். போர்க்குணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கை. தொ. மு. சி. ரகுநாதன் தமது ‘பஞ்சும் பசியும்’ நாவலில்,

“போாடுவோம்! வெற்றி பெறுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!”

என்று, முழங்குவதைக் கேளுங்கள்!

ஒரு சமுதாயத்தில் எவை எவை மதிக்கப்படுகின்றனவோ, அவற்றைப் பொறுத்தே அந்தச் சமுதாயத்தின் நடைமுறை அமையும்; வரலாறு நிகழும்!

பொதுவாக, மனித மதிப்பீடு - “நீதி சார்ந்த மதிப்பீடு!” ,“ஒழுக்கச் சார்பான மதிப்பீடு!” , “பண மதிப்பீடு” என்றெல்லாம் அமையும் .

இன்று, நமது நாட்டை வருத்துவதெல்லாம் பண மதிப்பீட்டுச் சமுதாயமேயாகும். எங்குப் பார்த்தாலும் பணத்திற்கே மதிப்பு கல்விக் கோயிலா? அங்கும் பணம் தான்! கடவுள் சந்நிதியா? ஐயய்யோ, சொல்லவே வேண்டாம்! அங்கும் பணத்திற்கே கொள்ளை மதிப்பீடு

கணவன் மனைவி உறவா? அங்கும் ஊடே பணமே விளையாடுகிறது! இந்தப் பண மதிப்பீட்டுச் சமுதாயம் அன்பைக் கெடுக்கிறது; உறவைக் கெடுக்கிறது: வாணிகப் புத்தியை வளர்க்கிறது; இலாப வேட்டையை கடத்துகிறது. இன்று நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ள

ச—2