பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 55

பக்தியைக் காட்டவேண்டும் என்று பாரதி. அறிவுரை கூறுகிறான்.

தேச பத்தி வளர “சுதேசியம்” என்ற தர்மத்தை அனுசரிக்க வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்துகிறான்.பாரதி தனது அறிவுரைக்கு அரணாக விவேகானந்தரின் உபதேசத்தைக் காட்டுகிறான்!

“எனது பாரத புத்திரர்களே! இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாதெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே!

மக்கள் எல்லாம் மகாசக்தியின் ஆவிர்ப் பாவங்கள்! இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்! இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்! இதைக் காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது” என்பது விவேகானந்தரின் அருள்வாக்கு!

பாரதி, தேச பக்தர்களைத் தேவர்கள் என்றும், தேச பக்தியில்லாத தேசத் துரோகிகளை அசுரர்கள் என்றும் கூறுகிறான்.

தாய் நாட்டின் நன்மைக்காக அறவழியில் அமைதியாக நாடெங்கும் நல்வழிகளைக் கண்டு அமைத்தும் தொண்டு செய்வதைத் தேசத் துரோகிகள் - அசுரர்கள் தடுக்க முயல்கிறார்கள்.

தேச பக்தர்கள் தக்க தலைமையின் கீழ்க் கட்டுப்பட்டு நாட்டுக்கு உழைத்தலையே தவமெனக் கொண்டு பணி செய்து வருகின்றனர். சில சமயங்களில்