பக்கம்:சாவின் முத்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

9


முடிவெல்லாம் கொக்கரிக்கும் வேகம்! வாளின்
முகமெங்கும் விஷக்கனலின் பாய்ச்சல்!
போரைக்
கொடுத்துவரும் அதிர்ச்சியிலே உலகே வந்து
குறுக்கிடினும் தூள்! தூள்!! தூள்!!! ரத்தத்
தூள்தான்!
துடிக்கின்ற நம்இளமை - வேங்கைக் கும்பல்
சுடுகாட்டை அமைத்துவிடும் பகைக்கு,என்று


எழுந்திட்டான் ஓர்வீரன்! ஆவே சத்தில்
இறங்கிற்றுப் பட்டாளம்! நெருப் பெடுத்துக்
கொழுந்துசெயும் விழிபறக்க, ரத்த வாட்கள்
கோடுவைத்துக் காட்டிற்றுப் பகையின் மேலே!
அழுந்திற்று ஆர்ப்பாட்டம்! மீட்சி ஏந்தி
ஆடிற்றுப் பேராண்மை!” என்றாள். நானும்:
விழுந்தடித்து வருகின்ற கதை சுவைத்து
விடைகேட்டேன் முழுநிலவை! தந்தாள்!
தின்றேன்!



கரும்பில் கனல் எடு

கங்கு கிழிந்த கதிர்விழிச் சிரிப்பை
வரிவா னத்தில் மாற்றி; நெஞ்சைப்
பனிப்ப டுத்தித்தன் பாதச் சிலம்பை
இசையில் இட்டு; ஏடு குளிர்ந்த
கன்னத் தரப்பில் சித்திரக் குழிகள்
கடைந்து; இளமை குழைத்து; மரகத
ஒய்யாரச் சப்பர மெய்த்தோள் விழுங்கப்
போதல் போல, பூங்கொடி அசைந்து