இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
சாவின் முத்தம்
காற்ற மைக்கக் கைவிசிறி;
கனிசெய்த தேன் அடிசில்,
சேற்றில்கிடக்கும் ஆரல் போலே - கிடாரந்
தொக்குஊறு காயை இலைமேலே
குனிந்தபடி பரி மாறிக்
கொண்டிருந்தாள் அன்னை, உள்ளே,
நனைந்தகொதிப் பாலேவஞ்சி காந்த,-
“முல்லைப்
பூஉண்டோ” என்றான் சிரிப்பேந்த!
தாய்:
“பூஉண்டு காலத் தால்
பூத்ததுதான். கண்ணில் அந்த
ஒவியம் விழுந்தால் பறிபோகும்! - இளமை
சந்தித்தால்புதுப் பாகுகள வாகும்!”
தையல் எழுப்பிய தங்க நிலவு:
உச்சி அனுப்பும் மலைமேல்
ஒட்டும் நிலாப்போல்; குதிர்மேல்
கச்சிதம் எழுதும்முகம் தந்தாள்! - அந்தக்
காமரூபன் அழகிலே விடிந்தாள்!
தடுக்கி விழுந்தான் அழகில்!
தாவி எடுத்தாள் விழியால்!
கொடிக்குகொடி நூறுவிதம் மாறும் -
பார்வைத்
தொடர்ச்சியிலே ‘கேள்வி-பதில்’
தூறும்!