பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 தாசிகள் சோபனப் பாடல், இராகம்:- பீம்பளாஸ் தாளம்:- சாப்பு இருகாதலர் சீர் சொல்லி ஆடுவமே-பூங் காவனக் குயில்போல் பாடுவமே சீதநன் மாலைகள் சூடுவமே-நாம் தீவிரமாய் ஒன்று கூடுவமே இரு பார்வையும் நேர் சந்திப்பாகுதடி-மனப் பான்மையில் தேன் சிந்திப் போகு தடி நேரிட்ட காதல் ப்ரவாகத்திலே-இவர் நீந்துகின்றார்கள் உற்சாகத்திலே-திவ்ய காதலர் கோயில் விலாசமடி-நல்ல கனியிதழ் தனில் மந்த காசமடி ஒதற்கரிய திவர் தேசமடி-இவர் உள்ளம் வெளியினிற் ப்ரகாசமடி (இரு காதலர்) தேவி பக்தன். இராகம்:- கெளரிமனோகரி தாளம்:- ஆதி எளியேனையாள் உலக நாயகி ஒளிமேனி காட்டி அருள் செய்குவாய் துளி ஞானமும் அனுகா என்னைத் தெளிவே யடையச் செய்குவாய் அன்னை கமழ் தாமரைப் பதம் காட்டுவாய் கலையாகிய பால் ஊட்டுவாய் அமுதாணசெந் தமிழ் ஞானமே அடைவித்தல் உன் கடன்தானமே