பக்கம்:சொன்னார்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


எனக்குப் பிறகு யார் என்று கேட்கிறார்கள். ஏசுவுக்குப் பிறகு அவருடைய பைபிள்தான். நபிக்குப் பிறகு. அவருடைய குரான்தான். அதுபோல, எனக்குப் பிறகு, என் எழுத்து, என் நூற்கள் இவைகள்தான்.

— பெரியார் (1-1-1963)


சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நான், திரு. ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பாலமீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்து வந்தேன். காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துக்களையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களேப் போட்டிருக்கிறோம்.

— நடிகர் கே. சாரங்கபாணி (13-8-1972)


முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்சிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா? அல்லது வேறு ஏதேனும் சூழ்ச்சியினலா? என்றால், அருளும் அன்று; சூழ்ச்சியும் அன்று;முகமதியர் மட்டும் அல்லர், இந்துக்களும் திரெளபதை கோயில், முருகக் கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லே. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா. கையால் தீயை எடுக்கலாம்; ஆனல் அதனே வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும். காலில் தீயின் வெம்மை சிறிது தாழ்ந்தே சுடுமாதலின், அஃது இரண்டு மாத்திரை குடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம். தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.

— பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878-ஆம் ஆண்டில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/92&oldid=1015978" இலிருந்து மீள்விக்கப்பட்டது