பக்கம்:சொன்னார்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


ஆதாரக் கல்வி என்றால் எதோ நூல் நூற்பது, காய்கறித் தோட்டம் போடுவது என்று நினைக்க வேண்டாம். அவைகளெல்லாம் குழந்தைகளைத் தொழிலிலே பழக்குவதற்காக ஏற்பட்டவைகளே தவிர வேறில்லை.

—காமராசர்

சமுதாய மாற்றத்திற்கு எவை எவற்றை ஒழிக்க வேண்டும் என்று கருதி, யாரும் செய்யாத தொண்டை நான் மேற்கொண்டதற்குத் துணிவு மனப்பான்மையே காரணம். இந்தத் துணிவு எனக்கு மட்டும் எப்படி வந்தது? நான் சிறு வயதில் காலியாய்த் திரிந்தவன். என்னைப் பெற்றவர்கள் ஒரு விதவைக்கு என்னைத் தத்துக் கொடுத்து விட்டார்கள். அந்த அம்மையால் என்னை அடக்கி வளர்க்க முடியவில்லை. நான் வீதியில் கிடக்கும் எச்சில் இலைகளில் எது கிடந்தாலும் எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். சாக்கடையில் நெல்லிக்காய் கிடந்தாலும் எடுத்துத் துடைத்துவிட்டு வாயில் போட்டுக் கொள்வேன். இப்படியெல்லாம் ஏற்பட்ட துணிவும், ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்று கேட்கும் தன்மையுமே என்னை இந்த அளவிற்கு வளர்த்திருக்கின்றன.

—பெரியார்

என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்.

—கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

மல்யுத்த மேடையில் இறந்துவிட வேண்டும் என்பது தான் என் நீண்ட நாள் ஆசை. ஆனால் கடவுள் இந்தப் பாக்கியத்தை மட்டும் எனக்கு அளிக்க மாட்டார் போல இருக்கிறது.

—மல்யுத்த வீரர் கிங்காங்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/26&oldid=1013132" இலிருந்து மீள்விக்கப்பட்டது