பக்கம்:சாவின் முத்தம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சாவின் முத்தம்

ஒய்ந்தசெயல் மீதுவிழும் ஊக்கம்; - தாயின்
உறைக்கின்ற நெஞ்சைப் புனலாக்கும்!

சுற்றி,யானைத் தோல்நி றத்துத்
திண்ணையிலே, பெண்க ளுடன்
வெற்றிலையை வாயில் ஏற்றிக் கொண்டு -
உதட்டை
விடுகதை பிடிக்கவிடல் உண்டு.

தின்றுதின்று அச்ச லிப்பைத்
தந்ததால் கதை விழாவை
அன்றுமட்டும் தூங்கவைத்து விட்டு-சோழி
ஆட்டத்தில் விழுந்தார் புரிபட்டு.

சோழி விளையாட்டிலே
சுருட்டி வைத்த நெஞ்சுதனை
நாழிசென்றும் நேர்ப்படுத்த வில்லை- பேச்சு
நடுவிலே சிரித்துவைப்பார் முல்லை!

பாய்க்காரனுடன் பாவையர் பேச்சு

பாய்கள் விற்றுக் கொண்டுஒரு
பையன்வந்தான் அந்தப் பக்கம்
தாய்செழித்த காது இசை மொள்ளும்!-வாய்
தம்பிவா இங்கே என்று அள்ளும்.

சேந்தும் விழி வீதியிலே
செல்ல, புதுச் சேதிதனை,
ஏந்திவரும் ஆர்ப்பாட்டங் கண்டு - விளை
யாட்டில்விழுந் ததுபல துண்டு!