பக்கம்:சொன்னார்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


நான் அதிகமாகச் சொற்பொழிவாற்றுவதில்லை. நான் தலைவன் அல்லன். மனித சமுதாயத்தின் தொண்டன் நான்.

கான் அப்துல் கபார்கான் (8-10-1969)

இந்திய மண்ணிலிருந்து, 40 கோடி இந்தியர்களின் ஆதரவு இல்லாமலேயே தங்களுடைய எதிரிகளைத் தாக்கிப் போரிடப் போகிறோம் என்று அமெரிக்காவும், இங்கிலாந்தும் நினைக்குமானால் அவர்களுக்கு அறிவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் போர் மக்களுடைய போர் என்ற எண்ணம் மக்களுடைய மனதில் உதிக்கவேண்டும். தங்களுடைய நாட்டுக்காகவும், தங்களுடைய சுதந்திரத்துக்காகவும் போரிடுவதாக அவர்கள் எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி மக்கள் நெஞ்சில் உண்டாகாத வரையில் எவ்வளவு தூரம் ரேடியோவிலும், பத்திரிகைகளிலும் பிரசாரம் செய்தாலும் பலன் இல்லை.

—சர்தார் வல்லபாய் பட்டேல் (8-8-1939)

(அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசியது.)

அபிவிருத்தி அடையாத தேசங்களுக்கு உதவி செய்யும் கொள்கைகளுக்கு-மார்க்கிசம், லெனிலிசம், ஸ்டாலினிசம், காரணம் என்று சொல்வதில் தவறில்லை.

—சர். சி. பி. ராமசாமி ஐயர், (6-6-1960)


தமிழ் நாட்டில் தமிழ் சங்கீதம் வளர்ச்சியடைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள் பாடுவதைப் பற்றி ஓர் விவாதம் நடந்து வருகிறது. சங்கீதத்திற்குப் பாஷை அவசியம் இல்லையென்று கூறப்படுகிறது. அப்படியானல் இப்பொழுது போற்றப்பட்டு வரும் மகான் தியாகராஜாவின் கீர்த்தனங்களுக்கு அவசியமேயில்லையே!

—ராஜாஜி (30.12.1942)

(காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/86&oldid=1015928" இலிருந்து மீள்விக்கப்பட்டது