பக்கம்:சாவின் முத்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

25


பாய்க்காரன்:

“கீரையூரின் மூக்கில் ஏறி,
கொம்புபோல் கிடக்கும் ஆற்றின்
ஒரம்வந்தால் தோன்றும் நிலக்கூறு - அந்த
ஊருக்கு ‘மருதூர்' எனப்பேரு!

‘விடங்கன்’ என்று கூப்பிடுவர்.
வெந்தய நிறத்துக் கப்பித்
தடம்அலைந்த பாதம்நோகு தம்மா - ஒன்றுகந் தின்னாமலேதூங்குகிறேன்சும்மா”

தாய்:

"கொஞ்சம்புசி அப்பா! மழை
கொக்கரித்துக் கொட்டு துபார்!
நெஞ்சுங்குளிரும்; அமைதி வேகும் -
உண்டால்
நிற்கும் எல்லாம்! வெதவெதப்பு ஆகும்.


ஏழைகாங்கள் தம்பி! ஏதோ
இருப்பதுதான் அமுதம்! இந்த
வாழைஇளம் பிஞ்சிக்கூட்டு கைப்பா? -
கிழங்கு
மசியலுக்கு என்ன? பாகம் தப்பா?

முற்றிய தயிர் இரவில்
வேண்டுதல் தகாது; கீரை
வற்றலுண்டு; வேண்டியதைக் கேட்டு -
வயிற்றை
வஞ்சனை பண்னாமலேநீ தீட்டு!”