பக்கம்:சொன்னார்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


‘ஜனநாயகம்’ ஆசிரியர், தோழர் திருமலை சாமியும், தோழர் எஸ். வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப் படுத்த உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் ஈரோடு ஷண்முகாதந்தா டாக்கி கம்பெனியாருக்கும் நண்பர்கள். நான் ‘பாலா மணி‘க்குப் பாட்டு எழுத வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணி’க் குரியவர் கதா சத்தர்ப்பங்களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். -

—பாவேந்தர் பாரதிதாசன் (19-9-1937)

நான், என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை இல்லாதவன்.

—பெரியார் (1-1-1962)

நான், சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பலகாரியங்களை நிறைவாகச் செய்பவன்.

—அறிஞர் அண்ணா (21-3-1967)

நான் முழுமையாக நேருஜியைப் பின்பற்றுவதாகவோ, காந்திஜியைப் பின்பற்றுவதாகவோ, சொல்லவில்லை இப்போது காலம் மாறிவிட்டது. மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிருக்கிறது. ஆனல் இந்த நாடு காந்திஜியின் லட்சியங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் இயங்கும். அவற்றை நாம் மறந்து விடவில்லை.

—பிரதமர் இந்திரா காந்தி (7-1-1975)

சினிமா ரசிகர்கள் சங்கத்தை ‘விசிறிகள் சங்கம்’ என்றோ, ‘ரசிகர் சங்கம்’, என்றோ, அழைப்பதைவிட, ‘ஆர்வகர் சங்கம்’ என்று அழைக்கலாம்.

—டாக்டர் ஏ.சி. செட்டியார் (19-6-1960)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/50&oldid=1013162" இலிருந்து மீள்விக்கப்பட்டது