பக்கம்:பாரதித் தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானியக் கவிதை

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோ அத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந் துன்பங்களே நோக்குகிருன். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனல் அதுபற்றித் தன் மனம் அமைதியிழந்து போக வில்லை என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

曾 肇 牵

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ ஜப்பானி யக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாருக நிற்கிறதென்றும் சொல்லுகிரு.ர். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. ‘கடுகைத் துளைத்தேழ் கடலேப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ் நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனலும், ஒரேயடியாய் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப் பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/222&oldid=605530" இலிருந்து மீள்விக்கப்பட்டது