பக்கம்:சொன்னார்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114


தோழர்களே! ”தீண்டாமை விலக்கு” என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள்; மூடபக்தியால் வரும் கேட்டைத் தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள். சேரிக் குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள், தெருக்களைப் பெருக்குங்கள். ”குடியரசு” ”தமிழன்” ”சண்டமாருதம்” முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வகிக்கச் சொல்லுங்கள். மந்திர தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்துவரும் உபாயங்கள், நீங்கள் அவர்கள் கண்களைத் திறகச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும் சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதைவிட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா?

—மா. சிங்காரவேலு பி.ஏ. பி. எல்;

(1932-ல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்)

நான் எப்போதும் எதிலும் அவசரப்படாதவன். நான் பிறக்கும்போதுகூட அவசரப்படாதவன் என்று என் பெற்றோர்கள் சொல்லுவார்கள். என் தாயாருக்கு இடுப்பு வலி மூன்று நாட்களாக இருந்தும், மூன்று நாட்களுக்குப் பிறகு தான் நான் பிறந்தேன்.

—அறிஞர் அண்ணா (11-1-1967)


என்னிடம் நிறைந்த நினைவாற்றல் இருப்பது கண்டு அட்டாவதானி இராமலிங்கம செட்டியார் அவர்கள் அட்டாவதானப் பயிற்சியும், அதன் முறைகளும் சொல்லி வைத்தார்கள். 1953-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி என்னுடைய ஊராகிய சாலிச் சந்தைக்கு 5 மைல் தொலைவிலுள்ள அத்திப்பட்டி என்னும் ஊரில் எனது அட்டாவதான நிகழ்ச்சி முதன் முதல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

—திருக்குறள் தசாவதானி பெ.இராமையா(30-1-1976)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/116&oldid=1016075" இலிருந்து மீள்விக்கப்பட்டது