பக்கம்:சொன்னார்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு கைகளையும் பார்த்தே பலன் சொல்ல வேண்டும். கைரேகை, ஒரு தெய்வீகக் கலை. ஒரு சிலர் இதில் பொய்யையும் சேர்த்து வியாபாரம் செய்வதால் இந்தச் கலையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து போகும்.

— கைரேகை நிபுணர் ரவிசங்கர் (23-7-1971)

என் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும்.

— ஆஸ்கார் ஒயில்ட்


'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது போன்ற அவ்வையாரின் மூதுரைகள் எனக்குப் பிடிக்கவில்லை. எதற்குப் போதும் என்ற மனம் வேண்டும்? தமிழர்களுக்கு ஏற்கெனவே உள்ள சோம்பேறித்தனம் போதாதென்று மேலும் அதை வளர்க்கவா?

—தொழிலதிபர். எஸ்.எம். பழனியப்ப செட்டியார்

சாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன்.

— ஆஸ்கார் ஒயில்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/61&oldid=1014685" இலிருந்து மீள்விக்கப்பட்டது