பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. மதுரை மாநகர்

துரைக்குப் புறத்தே வையை ஓடுகிறது. அதன் கரைகளில் பூம் பொழில்கள் வளர்கின்றன. அந்தச் சோலைகளினிடையே பெரும் பாணர்கள் வாழ்கிறார்கள். வையையாறு மதுரை மாநகருக்கு ஒரு பக்கத்து அகழியாக விளங்க, மற்றப் பக்கங்களில் ஆழமான அகழிகள் இருக்கின்றன. அகழியைத் தாண்டினால் பல பல கற்படைகளையுடைய பெரிய மதிலைப் பார்க்கிறோம். இந்த அகழியையும் மதிலையும் முற்றுகையிட்டுப் பல அரசர்கள் தோல்வியுற்று ஓடியிருக்கிறார்கள்.

மதில் வாசலில் மிக உயர்ந்த நிலை இருக்கிறது. அந்த நிலையில் தெய்வம் உறைவதாக எண்ணி வழிபடுகிறார்கள். அதிலுள்ள இரட்டைக் கதவுகளில் பலகாலும் நெய்யைத் தடவியதனால் அவை கரிய நிறம் பெற்றிருக்கின்றன. இந்த வாசலில் எப்போதும் மக்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

மதிலின் வாசல் வழியே உள்ளே புகுந்தால் ஆறுகள் கிடந்தாற் போன்ற அகன்ற நெடுந்தெருக்களைக் காண்கிறோம். மிக உயர்ந்த வீடுகளும் அவ்வீடுகளில் தென்றற் காற்றுப் புகுந்து ஒலிக்கும் சாளரங்களும் உள்ளன. வீடுகள் பல்வேறு கட்டுக்களும் அமைப்புக்களும் கொண்டனவாய்த் திகழ்கின்றன.