பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சினம் வெடித்தது

23


எல்லாருக்கும் ஊக்கம் உண்டாக்கி முன் நின்று போரை நடத்த முன் வந்தான் சோழன். சோழனும் பாண்டியனும் பரம்பரை வைரிகள். தன்னுடைய முயற்சி வரவர எண்ணிய திசையிலே எண்ணியபடி நிறைவேறி வருவதை எண்ணி எண்ணி இறுமாந்தான் சோழன். தன் தலையில் பாண்டி நாட்டு மணி முடியே ஏறிவிட்டது போன்ற கற்பனையில் அவன் கிடந்து தடுமாறினான். உடனே மதுரைக்குச் சென்று முற்றுகையிட்டுப் பாண்டியனைச் சிறைபிடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் அவனிடம் உண்டாயிற்று. நினைத்தவுடன் நடப்பதாக இருந்தால் இவ்வளவு முயற்சியும் அல்லலும் எதற்கு?

ஒருவாறு அவர்கள் ஏற்பாடுகள் நிறைவேறின. யார் யார் எப்போது எப்படி வந்து சேர்வது என்று யோசித்தார்கள். அவரவர்கள் வெவ்வேறு திசையில் வந்து தாக்கலாம் என்று முதலில் பேச்சு எழுந்தது. அப்படியானால் ஒவ்வொருவரையும் எளிதில் பாண்டிப் படை வென்றுவிடக்கூடும் என்று அஞ்சினர். படையின் சிறு சிறு பகுதியை ஒவ்வோரிடத்திலும் அனுப்பிப் பொழுது போக்கச் செய்துவிட்டுப் பெரிய படை இருக்கும் இடத்தில் பெரும்பாலான படைகளைக் கொண்டு சென்று பொருது அழித்து, அடுத்து வேறிடத்துக்கு வந்து பொரலாம். இப்படியே யாவரையும் பாண்டியன் அழித்துவிடலாம். ஆதலின், எல்லோரும் ஒருங்கே ஒரு திசையிற் சென்று போர் செய்தலே நலம் என்று தீர்மானித்தனர்.

இரு பெரு மன்னரும் ஐம்பெரு வேளிரும் போர் முழக்கம் செய்துவிட்டனர். முன் அறிவிப்பு இல்லா