பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கடைசி நாள்

ரத்தின புரியின் அரசனுக்கே
எத்தனை மனைவியர் ? அப்பப்பா !
மொத்தத் தொகையைச் சொல்லிடவா ?
முந்நூற் றறுபத் தைந்தாகும் !

மனைவியர் தனித்தனி வாழ்ந்திடவே
மாளிகை பலவும் கட்டிவைத்தான்.
தினமும் ஒருத்தியின் மாளிகையில்
திருப்தி யாகச் சாப்பிடுவான்.

ஒவ்வோர் ஆண்டும் ஒருநாள் தான்
உண்பான் ஒருத்தியின் மாளிகையில்.
இவ்விதம் சென்றன மூன்றாண்டு.
இனிமேல் நான்காம் ஆண்டாகும்.

அந்த ஆண்டின் கடைசிதினம்
அரசனை எந்த மனைவியுமே
வந்தே அழைக்கா திருந்தனால்,
வாட்டம் கொண்டே அவனிருந்தான்.

85