பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரை மாநகர்

85

அமைச்சர்கள் வாழும் மாளிகைகள் அவை. இவையாவும் மிகவும் உயரமான மாளிகைகள்.

பலவகையான பண்டங்களும், உணவுவகைகளும், மலையிலே விளைந்தனவும் நிலத்திலே விளைந்தனவும் கடலிலே விளைந்தனவுமாகிய பொருள்களும், முத்தும் பொன்னும் தாம் வாங்கிக்கொண்டு தம் நாட்டுப் பண்டங்களை விற்கும் வணிகர்களும், ஐம்பெருங் குழுவினரில் அமைச்சர் அல்லாத புரோகிதர், சேனாபதிகள், தூதர், ஒற்றர் என்னும் நால் வகையினரும், சங்கு அறுப்பாரும், மணியைத் துளையிடுவாரும், பொன்னணி செய்வாரும், பொன்னை உரைக்கும் பொன் வாணிகரும், ஆட்ைகளை விற்பவரும், செம்பை நிறுத்து வாங்கிக்கொள்பவரும், கச்சுக்களை அமைப்பாரும், பூவையும் தூபப் பொருளையும் விற்பாரும், எந்தப் பொருளையும் அழகாகத் தோன்ற எழுதும் ஒவியர்களும், பிறரும் கூடி நான்கு தெருக்களிலும், நெருங்கி நிற்கிறார்கள். இந்த இடங்களில் எப்போதும் கல்லென்ற ஓசை இருந்துகொண்டே இருக்கிறது.

பலாப்பழமும் மாங்கனியும் வெவ்வேறு வகையான காய்களும் பிற பழங்களும் கீரை வகைகளும் கற்கண்டும் ஊனும் கிழங்கும் கொண்டு ஆக்கிய இனிய உணவுகளைக் கொண்டு வந்து இடுவார் இட, அங்கங்கே அவற்றை நுகர்கிறார்கள் பலர்.

இத்தகைய அல்லங்காடியில் கப்பல் வந்து இறங்கும் துறைமுகத்தைப் போல ஒரே ஆரவாரமாக இருக்கிறது. பல வேறு பறவைகள் ஒருங்கே ஒலித்தது போன்ற ஓசை கேட்கிறது