பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


எடுத்தார் ஒன்றைக் கையிலே.
என்ன செய்தார் அதனையே?
படிக்கும் அறையில் வைத்தனர்;
பாய்ந்து வெளியே சென்றனர்.

வெளியில் சென்ற தந்தையார்
வீடு திரும்பி வந்தனர்.
களைத்து வந்த அவருமே
கண்டார் பேனா ஒன்றையே!

“இரண்டு பேனா இருந்தன;
எங்கே ஒன்று போனது?”
குரலில் கடுமை தெரிந்தது.
கோபம் பொங்கி வழிந்தது.

தந்தை குரலைக் கேட்டதும்
தாயார் ஓடி வந்தனர்.
“இந்த அறையில் உள்ளதை
எவர் எடுப்பார்?” என்றனர்.