பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெண்ணெய் திருடிய கண்ணன்

கண்ணன் வெண்ணெய் திருடித் தின்ன
எண்ணங் கொண்டனன்.
கள்ளத் தனமாய் ஒருவர் வீட்டின்
உள்நு ழைந்தனன்.
வெண்ணெய் முழுதும் தின்று, தின்று
தீர்த்துக் கட்டினன்.
வீட்டுக் காரி வந்து விட்டாள்;
மாட்டிக் கொண்டனன்!

‘வெண்ணெய் திருடித் தின்னு கின்ற
திருட்டுக் கண்ணனே,
வெளியில் போன சமயம் பார்த்துத்
திருட வந்ததேன்?
உன்னை உனது தாயி டத்தில்
இழுத்துச் சென்றுநான்
உரலில் கட்டி வைக்கச் சொல்வேன்’
என்று கூறினள்.

47