பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆகாய விமானம்

இங்கி லாந்தில் ஜவஹரும்
இருந்து வந்த நாளிலே
அங்கே வந்த நாள் இதழ்
அனைத்தும் படித்து வந்தனர்.
பறவை போல வானிலே
பறந்து பறந்து செல்லவே,
விரும்பிச் சிலரும் முயன்றதை
வியந்து படித்து மகிழ்ந்தனர்.
"அண்ணன், தம்பி இருவராம்
ஆர்வில், வில்பர் என்பவர்
விண்ணில் பறக்கும் வகையிலே
விமானம் கண்டு பிடித்தனர்",
என்ற செய்தி அறிந்ததும்
எழும்பிக் குதித்தார் ஜவஹரும்
அன்று தமது தந்தைக்கே
அன்புக் கடிதம் அனுப்பினார்.
“விரைவில் இந்த வாரமே
விமானம் ஏறி அங்குநான்
வரவே முடியும்” என்றுதான்
மகிழ்ச்சி யோடே எழுதினார்!