பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். "நான் அந்தத் தலத்தைப் பார்த்ததில்லை" என்று இவர் சொல்ல,

"இன்றே போய் வரலாம்" என்று தம் காரில் அழைத்துக் கொண்டு அந்தத் தலத்துக்குப் போய் வந்தார் செட்டியார். இவர் தாம் திருவாடானை போய் வந்ததை ஓர் அன்பரிடன் சொன்னார். "எப்படிப் போய் வந்தீர்கள் ?" என்று அவர் கேட்டார். ஜாம் ஜாமென்று மேனாவுடன் போய் வந்தேன். மடாதிபதிதான் மேனாவோடு போக வேண்டுமா?" என்றார் இவர். (மேனா - பல்லக்கு வகை, மெய்யப்பச் செட்டியார்.)

கையைப் பிடியுங்கள்

இவர் சொல்லும் கதைகளில் ஒன்று:

ஒரு வீட்டில் ஒருவர் விருந்துண்ணப் போனார். , ஒரு பெண்மணி 's பரிமாறினாள். ரசம் பரிமாறியபோது அவர் ஒ: சாதத்தைக் குழித்துத் கொண்டார். அவருக்கு ரசத்தில் பிரியம் இருப்பதை அறிந்து, பரிமாறிய பெண்மணி , "கையைப் பிடியுங்கள்" என்றாள். அவர் உடனே அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துவிட்டார்!

வரா, வரா

மிகவும் ஆவலுடன் ஒரு பெண்மணியை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில்