பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 47


உதவாத டெலிபோன்

ந்த வட்டாரத்திலே கார்த்திகேயர்தான் பெரிய பணக்காரர். அவருடைய மாளிகை மிக மிகப் பெரிதாயிருக்கும். ஏராளமான செலவில் அவர் அதைக் கட்டி வைத்திருந்தார். அதன் உள்ளே எல்லாவிதமான வசதிகளும் இருந்தன. டெலிவிஷன், ரேடியோ, டெலிபோன், பனிப்பெட்டி, மெத்தை போட்ட நாற்காலிகள், மின்சார விசிறிகள், அலங்காரப் பொம்மைகள் யாவும் இருந்தன.

அவருடைய மாளிகையில் இவ்வளவெல்லாம் இருந்தும் அவருடைய நெஞ்சிலே கொஞ்சமேனும் ஈரம் இல்லை. ஏழைகள் என்றாலே மனித இனத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது அவருடைய