பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பசுவே, பசுவே, உன்னைநான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

வாயால் புல்லைத் தின்கின்றாய்.
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்.

சேர்த்து வைக்கும் பாலெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.

கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.

4