பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பல் ஒன்று சுற்றிலும் கூடி அன்று கிற்கையில், அம்பு போலப் பாய்ந்துமே அங்கோர் பையன் வங்தனன். இரைக்க இரைக்க வந்தவன் என்னே ! நமது சோதிடர் இருக்கும் வீடு தீயிலே எரியு தென்றே கதறினன். பையன் சொல்லைக் கேட்டதும் பதறி எழுந்த சோதிடர், ஐயோ, அப்பா ! என்றுமே அலறி ஒட்டம் பிடித்தனர். முன்னுல் அவரும் வேகமாய் மூச்சுப் பிடித்து ஓடவே, பின்னல் அவரைத் தொடர்ந்தது, பெரிய கூட்டம் ஒன்றுமே. காடி தளர்ந்து விட்டது. நாக்குத் தொங்கிப் போனது. ஒடி வந்தார் அப்படி, < உடல்கு லுங்கச் சோதிடர் மஜனவி மக்கள் தீயிலே மடிந்து, வீட்டில் உள்ளவை அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாய் ஆன தென்றே எண்ணினர். 108