பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 77



அரைமணி நேரம் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே, அருகிலே அமைதியாக இருந்தது. படுத்திருந்த கோவிந்தசாமி "ரங்கா!ரங்கா" என்று கத்திக்கொண்டே எழுந்தார். எதிரிலே ரங்கனைக் கண்டதும், “ஆ! இப்பத்தானேடா உன்னைக் கனவிலே கண்டேன்! நேரிலே வந்துட்டியே!” என்று கூறி அதைக் கட்டிப்பிடித்து மடியிலே தூக்கி வைத்துக் கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.

‘எங்கேடா போனாய். என்னைத் தனியா விட்டுட்டு? உன்னைக் காணாமே எங்கெங்கே தேடினேன்? யாரை, யாரையெல்லாம் விசாரிச்சேன்! நல்லவேளை, நீயே திரும்பி வந்...” கூறிக் கொண்டிருக்கும்போதே, ரங்கனின் வால் அவர் கண்களில் பட்டது.

“ஐயோ! இது என்ன? என் ரங்கனின் வாலை எந்தப்படுபாவியோ வெட்டிட்டான்?” என்று ஆத்திரமும், கோபமும் கலந்த குரலில் கூறி, வாலைப் பிடித்து மெல்லத் தடவிக் கொடுத்தார்.

பிறகு, ரங்கனைத் தூக்கிக்கொண்டு பக்கத்திலே இருந்த ஒரு கடைக்குப் போனார். இரண்டு நாளாக மூட்டை தூக்கிச் சம்பாதித்து வேட்டியிலே முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்தார். ஒரு டஜன்