பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 33



அந்தக் கார் மெதுவாக ஊர்ந்து வந்ததால், அதற்குப் பின்னாலே வந்த கார்களும் ஊர்ந்தே வந்தன. இதனால், கடைத்தெருவில் நெருக்கடி ஏற்பட்டது.

“ஏ பையா, என்ன, வீட்டிலே சொல்லிட்டு வந்திட் டியா? எருமை மாட்டை விட மெதுவா, நடுத் தெருவில் நடக்கிறியே!”

டிரைவர் என்ன சொல்லியும் பொன்னன் ஒதுங்க வில்லை. “இன்றைக்கு சுதந்தர தினம். என் விருப்பம் போல் சுதந்தரமா நடுத் தெருவிலே நடப்பேன்;