பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராட்டைப் பாட்டு

ராட்டையிலே நூல் நூற்கும் பழக்கம் வெகு காலமாக இந்நாட்டில் இருக்கிறது. இடையிலே இந்தப் பழக்கம் விட்டுப் போயிற்று. மறுபடியும் ராட்டைக்குப் புத்துயிர் கொடுத்தவர் காந்திமகான்.

ஆனால், ராட்டைப் பாட்டு என்ற நாடோடிப் பாடல் இப்பொழுது ஏற்பட்டதல்ல. இது பழங்காலத்திலிருந்து கிராமங்களிலே ஒலிக்கும் ஒரு நகைச்சுவைப் பாட்டு.

ஒருத்தி ராட்டையிலே நூல் நூற்றாளாம். அந்த நூலைச் சந்தையிலே கொண்டுபோய் விற்றாளாம்.

நூலை விற்ற காசைக் கொண்டு அவள் பலவகையான பண்டங்கள் வாங்குகிறாள். அடடா, அவளுக்குக் கிடைத்த காசில் என்னென்ன வாங்க முடிகிறது!

பாட்டைப் பார்ப்போம். முதலில் அவள் நூல் நூற்ற பெருமையைக் கேட்கலாம்.