பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

காற்றில் வந்த கவிதை

தலைச்சவரம் பண்ணிக்கிட்டு-உங்களப்பன்
தலைப்பாவும் வச்சுக் கிட்டு
கோயமுத்தூர் போரதுக்கு-உங்களப்பன்
குடையைக் கையில் புடிச்சிக்கிட்டு
பாதம் ரண்டும் நோகாமல்-உங்களப்பன்
பாதகொரடும் போட்டுகிட்டு
சாரட்டு வண்டி கட்டி-உங்களப்பன்
சலங்கை போட்ட மாடுகட்டி
கோயமுத்துர் போராரு-உங்களப்பன்
கோழி கூவும் நேரத்திலே
பகையாளி பதுங்கி நிற்க-உங்களப்பன்
பார்க்காமல் போகையிலே
பறந்து பாஞ்சான் பகையாளி-உங்களப்பன்
பம்முனாரு பயமில்லாமே
பட்டாக்கத்தி விசையிலே-உங்களப்பன்
பறந்தானே பகையாளி
மாடு ரண்டும் மிரண்டோட-உங்களப்பன்
மத யானைபோல் முன்னே ஓடி
மடக்குளுரு மாடுகளே-உங்களப்பன்
மத்தியான வேளையிலே