பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு அடிகளார்



690. “ஆசைகாட்டி வாங்குவன எல்லாம் ஒரு வகையான சுரண்டலேயாம்.”

691. “வெள்ளாடு வேளாண்மைத் தத்துவம் சொல்வது போல, சில பத்திரிக்கைகளைப் படித்த அளவிலேயே சிலர் விமர்சனப் புலிகளாகிவிடு கின்றனர்.”

692. “அணைக்கப்படும் பாங்கைப் பொறுத்தே அதிகாரம் நிலைபெறும்; அடிப்பதில் அல்ல.”

693. “சுகத்தை அனுபவிக்கும் மனப்போக்கு வந்த பிறகு உழைப்பாளியாதல் அரிது.”

694. “விமர்சனத்திற்கு வெட்கப்படுபவர்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள்.”

695. “விமர்சனமும் வளர்ச்சியும் காரண காரியங்கள்.”

696. “இன்றைய அறிவு நல்கும் கருவிகள் அனைத்தும் அறிவு என்ற பெயரில் அறியாமையையே வளர்க்கின்றன.”

697. “நிலத்தினை முழுதும் பயன்படுத்தும் ஆற்றலே இன்னும் மனிதனுக்கு வரவில்லை.”

698. “இயற்கையை வெல்லும் முயற்சியில் மனிதன் ஈடுபடவில்லை. இயற்கையை ஒட்டித்தான் வளர்ந்து வருகின்றான்.”

699. “இன்று சாதாரணமானவை என்று கருதப் பெறுபவை அனைத்தும் உயர்ந்தவைகளேயாம்.”

700. “விதிகள் - அச்சமின்றி நடக்க உதவுவன. விதிகள் - அச்சமின்றிக் காரியங்கள் செய்ய உதவுவன.”