பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

காற்றில் வந்த கவிதை


அவிழ்ந்தவேட்டி கட்டாமல்
திறந்தவாயை மூடாமல்
நிழலைக்கண்டால் நிற்காமல்
தண்ணிர்கண்டால் குடியாமல்
மனுசர்கண்டால் பேசாமல்
மாட்டைக்கண்டால் விலகாமல்
என்புருசன் வல்லரக்கன்
எதிரேவரக் கண்டீரோ


கணவனைப்பற்றி விசாரித்துக்கொண்டே வருகிறாள். யாரும் அவனைப் பார்த்ததாகக் கூறவில்லை. அதனால் அவள் வேகமாக வீட்டுக்கு வருகிறாள். வந்ததும் அரிவாள் மனையை எடுத்து வைத்து மீனையெல்லாம் கண்டங் கண்டமாக அரிந்து போடுகிறாள். பிறகு அடுப்பிலே வைத்து அந்தக் கண்டங்களைப் பக்குவம் செய்கிறாள்.


வேகமாக வந்தாளாம்
வீட்டுக்குவந்து சேர்ந்தாளாம்
அரிவாள்மனையை எடுத்தாளாம்
அரிந்தரிந்து போட்டாளாம்
அரிந்தரிந்து போட்டாளாம்
ஐம்பது கண்டம் போட்டாளாம்
நாணிக்கோணிப் பார்த்தாளாம்
நாற்பதுகண்டம் போட்டாளாம்
சாற்றையெல்லாம் கூட்டிக்கிட்டு
அடுப்பிலேதான் வைத்தாளாம்
தீயைநல்லா எரித்தாளாம்
சினுக்குத்தாளம் போட்டாளாம்