பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆயன் பெருமாள்

பெருமாளின் அருள் கிடைத்தால் பிறகு வாழ்க்கையில் ஒருவிதமான துன்பமும் இராது. அவருடைய கடைக்கண் பார்வை போதும் இகபர சுகங்கள் எல்லாம் கிடைக்கும். ஆழ்வார்கள் அற்புதமான தெய்வப் பாடல்களால் திருமாலின் அருள் வேண்டிப் பாடியிருக்கிறார்கள். அவருடைய அருளால் கிடைத்த பெரியதோர் இன்பத்தைப் பற்றியும், ஆன்ம அனுபவத்தைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள்.


பெருமாளின் அருளை வேண்டும் நாடோடிப் பாடலும் உண்டு. சேகண்டியையோ மணியையோ அடித்துக்கொண்டு ஆயன் பெருமாள் அருள் தர வேண்டுமென்று ஆசீர்வதித்துப் பாடிக்கொண்டு வருகின்றவனுக்குக் கிராமங்களிலே தாராளமாகப் பிச்சை கிடைக்கும். பாடுகின்றவன் யாராக இருந்தாலும், அவளால் பாடப்படுகின்ற பெருமாள் கருணாமூர்த்தி யல்லவா? அவருடைய கருணை கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.


ஆடுமாடு-பெருகவேணும்-ஆயன் பெருமாளே
ஆதீனங்கள் பெருகவேணும்-ஆயன் பெருமாளே