பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

35



258. “மற்றவர் பற்றிய இகழ்ச்சியை விரும்புகிறவன், புகழுக்குரியவன் அல்ல.”

259. “உடலுயிர் வாழ்க்கைக்குக் காற்றை இடையிடின்றி சுவாசிப்பது போல, உயிர் இறைவனை சுவாசித்தல் வேண்டும்.”

260. “அறிவுக்கு இசைந்து வராத வளர்ச்சிக்கு தொடர்பில்லாத வரையில் பற்றாக்குறை நீடிக்கும் வரையில் மனித உழைப்பு பயன் தரவில்லை என்றே பொருள்.”

261. “உழைத்தால் போதாது; பொருள் ஈட்டினால் போதாது. உழைப்பும் பொருளும் பயன் தரும் நிலையினை அவ்வப்பொழுது அளந்தறிதல் வேண்டும்.”

262. “மனிதர் பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக உண்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக யாதொரு கடமையையும் செய்வதில்லை. எதிலும் தொடர்ச்சி இல்லையேல் வெற்றி இல்லை.”

263. “வயிறு தேவையை அறிவித்துப் பெறுகிறது. இயற்கைக்கு வாழ்க்கையின் மீது இருந்த பற்றின் காரணமாக உடல் வாழ்க்கைக்குத் தேவையானக் காற்றை, உணவை தாமே பெறும் உறுப்புக்களைத் தந்துவிட்டன.

ஆனால் அதுபோல் மூளையும் மனமும் செயற்படுவதில்லை. வாழ்வாங்கு வாழும் முயற்சி மனிதனுடையதே.”

264. “பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.”

265. “உனது வருத்தத்தைக் கடுஞ்சொற்களால் காட்டாதே. சொல்லும் பாங்கில் காட்டு!"