பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

93



828. “மனிதன் தன்னுடைய பெரிய தவறுகளைக் கூட நியாயப்படுத்துகிறான். மற்றவர்களுடைய சிறிய பிழையைக்கூட பெரிதுபடுத்துகிறான்.”

829. “ஜனநாயகம் வெற்றி பெற அரசியல் வாதிக்குக் கொள்கை, கோட்பாடு உறுதி ஆகியன தேவை.”

830. “பெண் பெருமைக்குரிய பிறப்பு.”

831. “எதிர்பார்த்துச் செய்தல் என்பதே சிறந்த செயற்பாடு.”

832. “வைதீகப் பூசனையை விட, ஆயிரம் மடங்கு பயனுடையது அன்புவழிபாடு.”

833. “செய்தித் தாள்கள் தரும் செய்திக்ளைக் கொண்டு நன்மை, தீமைகளை முடிவு செய்ய இயலாது; கூடாது.”

834. “குடியாட்சியின் சிறப்பு, குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள நெருக்கமான உறவுகளைப் பொறுத்ததேயாம்.”

835. “அரசாங்கத்தின் நிதியைப் போற்றத் தெரியவிட்டால் வலிமையான அரசாங்கம் அமையாது.”

836. “நன்மைகளே கூட பிறிதொரு காலத்தில் தீமையாக மாறி விடுவதுண்டு. விழிப்பு தேவை.”

837. “கூட்டுறவு இயக்கங்கள், பஞ்சாயத்துக்கள் நாட்டை உயிர்ப்பு நிலையில் வைத்துக் கொள்ள உதவி செய்வன.”

838. “விவசாயிகளுக்குக் கடன் வஜா! மறுபுறம் கள்ளுக்கடை வசூல்!”