பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

169



1677. “சாதாரண மக்களின் ஆன்மாவை விழித்தெழச் செய்தால்தான் வளர்ச்சிப் பணிகள் பயன் தரும்.”

1678. “பொறுப்பற்ற நிலை என்பது நமது நாட்டுக்கும் பழக்கமாகிவிட்டது.”

1679. “காரண, காரியங்களை கடந்தததே உண்மையான அன்பு.”

1680. “தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள்-ஒளிதலம் தர இயலாதவை.”

1681. “ஒரு மனிதர் எவ்வளவு சின்னவராக இருந்தாலும் அவர் அளவுக்கு அகந்தை-அழுக்காறு கொண்டுள்ளனர்.”

1682. “தமிழ் நாட்டில் கிறித்துவர்கள்-இன்றும் வாழ்க்கையில் இந்துக்களே.”

1683. “இலஞ்சம் என்பது இன்றைய பழக்கங்களில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது.”

1684. “கால உணர்வு நற்பழக்கங்களுக்கு எல்லாம் தாய்.”

1685. “பழகப் பழகத்தான் எந்தப் பழக்கமும் உறுதிபெறும்.”

1686. "சமயத் தலைவர்களுக்கு, செல்வந்தர்களிடம் பழக்கம் வந்துவிட்டாலே, அறநெறிப் போதனைகள் திசைமாறிவிடும்.”

1687. “இன்றைய அறநெறிகள் - சட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு எதிரானவையே.”

1688. “மங்கையர் பலர் அணிகலன்களை-அழகுக்காக அணிவதில்லை - மற்றவர்களுக்குக் காட்டவேயாம்.”