பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

பக்தன் ஆகிவிடுவான். இறைவனை நெஞ்சில் வைத்தவனைக் கொல்ல முடியாதே! அதனால் தான் அவர் பயந்தார். நல்ல வேளை! இரண்யன் ஒரு தூணைக் காட்டி அவரைத் தப்புவித்தான். அதனால் தான் இறைவனுக்கே உதவி செய்தவன் இரண்யன் என்று கொள்ளலாம்",

Corruption & Correction கி.வா.ஜ. அவர்கள் ஒரு சமயம் கூறியது:

"அரசாட்சியில் இருப்பவர்களைப் பணமும் பதவியும் G&GágroñGub. Power and Money Corrupt argårl Ig off,3rrao அரசியல் பாடம். ஆனால் முற்காலம் அப்படி அல்ல. தசரதன் முதலிய அரசர்களை Coாuption ஏன் ஆட்கொள்ளவில்லை? அவர்களை Correction செய்ய குருமார்கள், அதாவது வசிஷ்டர் போன்ற கற்றறிந்த நேர்மையான ஆசான்கள் இருந்ததால் தான்". -

நெருக்கமா ? நெருக்கடியா o

மயிலையில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் கலந்து கொண்டு பேசவந்த கி.வா.ஜ. வுக்கு மேடையில் தாராளமாக அமர்ந்து பேச இயலவில்லை. காரணம் அன்று பேச இருந்த பேச்சாளர்களும் அதிகம். எப்படியோ ஒண்டிக் கொண்டு அவர் அமர்ந்திருந்தார். அவர் பேசும்போது

"இன்று மேடையிலும் விழா அரங்கிலும் அதிகமாக மக்கள் குழுமியிருக்கிறார்கள். எனது நண்பர் என்ன