பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

காற்றில் வந்த கவிதை


ராட்டை யென்றால் ராட்டை
கருங்காலி ராட்டை
ஒரு பூட்டு நூலைத்தான்
ஒடி ஒடி நூற்றாளாம்
ஒடி ஒடி தூற்றாளாம்
ஒன்பது பலம் நூற்றாளாம்
பாடிப் பாடி நூற்றாளாம்
பத்துப் பலம் நூற்றாளாம்
வேளை வேளை நூற்றாளாம்
விசுக் கூடையில் போட்டாளாம்.

விசுக் கூடையில் நூலைப் போட்டாயிற்று. இனிச் சந்தைக்குப் போக வேண்டியதுதான். தனியாகச் சந்தைக்குப் போக முடியுமா? துணை வேண்டாமா? அதற்காக அவள் மாமியையும், மதனியையும் மற்றவர்களையும் கூப்பிடுகிறாள். சந்தைக்கு வரவில்லையா என்று அவர்களைக் கேட்கிறாள்.


மாமி வல்லையா சந்தைக்கு
மதனி வல்லையா சந்தைக்கு
சின்னக்கா வல்லையா சந்தைக்கு
பொன்னக்கா வல்லையா சந்தைக்கு
நங்கை வல்லையா சந்தைக்கு
கொழுந்தி வல்லையா சந்தைக்கு


கடைசியிலே அவள் சந்தைக்குப் போகிறாள். ஆனால் ஒரே சந்தையில் அவளால் நூலை விற்க முடியவில்லை. எத்தனையோ சந்தைகளில் நூலை விற்க முயற்சி செய்கிறாள்.