பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராட்டைப் பாட்டு

97


வெள்ளிக்கிழமைச் சந்தைக்குப் போய்
வேண்டாமென்றார் எந்நூலை
புதன்கிழமைச் சந்தைக்குப் போயும்
போகவில்லை எந்நூலும்
திங்கட்கிழமைச் சந்தைக்குப் போய்
சீந்துவாரில்லை எந்நூலை
ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்குப் போய்
நாயுங்கூட கேட்கவில்லை.


இப்படிப் பல சந்தைகளிலே நூலை விற்க முடியாமல் கடைசியிலே அவள் ஆலத்துார் சந்தைக்குப் போகிறாள். ஆலத்துரர் அவளுடைய தந்தை வாழும் ஊர். அந்தச் சந்தையிலே பழக்கப்பட்ட ஒருவன் அவள் நூலை வாங்கிக் கொள்கிறான். அவள் காசைப் பெற்றுக்கொண்டு கடைக்குப் போகிறாள்.


ஆலத்தூருச் சந்தையாம்
அப்பனுாருச் சந்தையாம்
அம்பனூருச் சந்தையிலே
அறிந்த கைக்கோளன் கண்டானாம்
அறிந்த கைக்கோளன் கண்டுமே
அஞ்சரைக் காசுக்கு வாங்கினான்
நூலையெல்லாம் போட்டுவிட்டு
காசைத்தானும் வாங்கிக்கிட்டு
காசைத்தானும் வாங்கியதும்
கடைக்குத்தானும் போனாளாம்

எந்தக் கடைக்கு முதலில் போகிறாள்? பெண்களுக்குப் பூவென்றால் மிகுந்த விருப்பமல்லவா? அதனால் முதலில் பூக் கடைக்குப் போகிறாள். என்னென்ன பூ வாங்குகிறாளென்று பாட்டிலே பாருங்கள்.