பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. வெற்றிலை வாணிகர்


புதுக்கோட்டைப் பகுதியில் வெள்ளாறு ஒடுகிறது. அதன் இரு கரையிலும் உள்ள நாட்டுக்குக் கோனாடு என்று சங்க காலத்தில் பெயர் வழங்கிற்று. இடைக் காலத்தில் விசயாலயன் இராசராசன் முதலிய சோழ வேந்தர் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் காலத்தில் முதல் இராசராசனது 18-ஆம் ஆண்டுக்குப் பின் இக் கோனாட்டுக்கு இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்று பெயர் உண்டாயிற்று. ஆனாலும் பழம் பெயரை மறவாதபடி, கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்றே அது கூறப்பட்டு வந்தது.

இந்த நாட்டில் அந்தக் காலத்தில் விளங்கிய பேரூர்களில் திருநலக் குன்றம் என்பது ஒன்று. இப்போது அது குடுமியான் மலை என்ற பெயருடன் நிலவுகிறது. இதனருகே காப்புக்குடியென்பது ஒர் ஊர். அந்த நாளில் வாழ்ந்த வேந்தர்கள், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களுக்கு நீர் வளம் பொருந்திய ஊர்களைக் கொடுப்பது வழக்கம். அதற்குப் பிரமதாயம் என்று பெயர்; அது பிரமதேயம் என்றும் மருவி வழங்கும்.

தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கட்டிய இராசரர்ச சோழனுக்குப் பின் அவன் வழியில் முதற் குலோத்துங்கன் என்னும் வேந்தன் ஆட்சி புரிந்தான். அவன் சுமார் 880 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1070 முதல் 1120 வரையில் ஆட்சி செய்தான். இந்தக் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு அவனுடைய ஆட்சியில் இருந்தது. மேலும், அக் காலத்தில் நாட்டின் பரப்பைக் கணக்கெடுத்தவர், கோனாடு இருபத்து நான்கு வட்டகைப் பரப்புடைய தெனக் கணக்கிட்டனர்; இதை அப் பகுதியில் காணப்படும் கல் வெட்டுக்கள் உரைக்கின்றன.

இந்தக் கோனாட்டில் திருச்சிராப்பள்ளி வழியாகவும், தஞ்சை வழியாகவும் வெற்றிலை வாணிகர் வந்து வியாபாரம்