பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பஞ்ச தந்திரக் கதைகள்


எல்லாவற்றையும் உண்மை என்று நினைத்துக் கொண்ட எருது ,'ஒப்புயர்வில்லாத அந்தச் சிங்கத்தைச் சண்டையிட்டுக் கொல்ல எப்படி முடியும்? அதற்கு ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்’ என்று நரியைத் தானே கேட்டது.

'சிங்கம் உன்னைக் கொல்ல வரும்போது, கோபத்துடன் வரும். அப்போது அதன் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும். வாயைப் பிளந்து கொண்டு கண்கள் சிவக்க அது பாய்ந்து வரும். அந்த சமயம் பார்த்து வாலைத் தூக்கிக் கொண்டு தலையையும் கொம்பையும் ஆட்டியபடி எதிரில் சென்று போரிடு’ என்று நரி வழி சொல்லியது.

இவ்வாறு எருதை முடுக்கிவிட்டு நரி, நேரே சிங்கத்திடம் சென்றது.

'இன்று எருது தங்களைக் கொல்ல வருகிறது அரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில் எருது அங்கே வந்தது. அப்போது சிங்கம் கோபத்தோடு அதை உற்றுப் பார்த்தது. அதன் கண்கள் சிவந்திருந்தன. இதைக் கண்டதும், நம்மோடு சண்டை செய்யச் சிங்கம் தயாராக இருக்கிறது என்று நினைத்துக் காளைமாடு வாலைத் தூக்கிக் கொண்டு கொம்பை ஆட்டியபடி ஒடி வந்தது.

சிங்கம் அதன் வாயைப் பிளந்து கொண்டு அதன் மேல் சீறிப் பாய்ந்தது. மண்ணும் விண்ணும் அதிர,